
யாழ். மானிப்பாய் கட்டுடை பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடைய ந.ஜெயமோகன் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தை யாழ். வைத்தியசாலையில் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment