.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 11, 2008

மட்டக்களப்பு - நொச்சிமுனையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை


மட்டக்களப்பு - நொச்சிமுனை - இசைநடனக் கல்லூரி வீதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 வயதுடைய விநாயகமூர்த்தி பசுதேவன் என்பரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கட்டடவேலைத் தொழிலாளியான குறித்த இளைஞர், இனந்தெரியாத ஆயுததாரிகளால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments: