.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

பசில் - முகர்ஜியை நாளை சந்திக்கவுள்ளனர்


இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாட ஜனாதிபதி ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்தியா செல்லும் விசேட குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
உண்மை நிலைமைகளை நேரில் கண்டறிய இலங்கை வருமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் வருகையை திருப்தியுடன் எதிர்பார்த்திருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
வடக்கு மோதல் தொடர்பில் இந்தியாவில் தலைதூக்கியிருந்த பிரச்சினைக்கு தற்போது சாதகமான பெறுபேறுகள் ஏற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் நிலைப்பாடு என்பன தொடர்பில் தமது அரசுக்கு நம்பிக்கை உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: