.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

அஜித் - அர்ஜூன் ஆகியோரின் கருத்து குறித்து இலங்கைத் தமிழர்கள் மிகுந்த கவலை


இலங்கை தமிழர்களுகாக தாங்கள் ஏன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டுமென நடிகர்களான அஜித் குமாரும், அர்ஜூனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.
அத்துடன் அஜித்குமார் நடிக்கும் ஏகன் படத்தின் பிரத்தியே காட்சிகளுக்கள் இலங்கையில் இன்று காண்பிக்கப்பட்டன.
அதற்கும் அஜித் குமாரின் இலங்கை ரசிகர்களின் பெரும்பாலானோர் சமூகமளிக்கவில்லையென அந்த படத்தைப் பார்வையிடச் சென்ற எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
ஏகன் படம் தீபாவளியையொட்டி உத்தியோகபூர்வமாக இலங்கையிலுள்ள சினிமா தியேட்டர்களுக்கு நாளை முதல் வெளிவரவுள்ளன.
இந்த நிலையில் இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இலங்கை வாழ் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள்.

No comments: