
வாகரை பிரதேசத்தில் வைத்து தமிழர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
வாகரை பிரதேசமானது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவந்துள்ளதாக கூறிக்கொண்டு வருகின்ற போதிலும் அங்கு விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
வாகரை பிரதேசமானது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவந்துள்ளதாக கூறிக்கொண்டு வருகின்ற போதிலும் அங்கு விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment