
புத்தளம் பாலாவி பிரதேசத்தில் இன்று காலை 7 மணி முதல் 10 மணிவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தமிழர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாலேயே கைது செய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.
இந்த தேடுதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment